குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்.
கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக உலக நாடுகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இப்போது சற்று அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டெழும்போது குரங்கு அம்மை நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
கொரோனாவினால் அதிக இழப்புகளை சந்தித்த இத்தாலி இந்த குரங்கு அம்மை தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ரோம் நகரின் தொற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவர்கள் இந்த தடுப்பூசி பற்றி தெரிவித்துள்ளனர். பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட ஜின்னியோஸ் தடுப்பூசி குரங்கு அம்மைக்கும் எதிராக செயற்படுகிறது. காரணம் பெரியம்மை வைரஸும் குரங்கு அம்மை வைரஸும் ஒன்றோடு ஒன்று ஒத்தவை. அதனால் அந்த தடுப்பூசியானது குரங்கு அம்மை நோய்க்கு எதிராக செயற்படுமென வைத்தியர் குலாம் தெரிவித்துள்ளது.